Tuesday 17 April 2012

மரண செய்திகள்!

மரண செய்திகள்!



  1.  கள்ளம்பேரன் அமீர் மகளும் அத்தாப்பு மதனியாளுமான் ரோஷன் பிவி நேற்று 16.4.12 சென்னையில் வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப் பட்டது.
  2. வெள்ளசன் அவ்லியா ஜலால் அக்காள் ரூநிஷா மகன் மம்மக்கா பர்மாவில் வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா பர்மாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
  3. புலவர் பி.என்.எஸ்.யூனுஸ் அவர்களின் மனைவியும் ஓய.மம்மது காகா தாயாருமான குறைஷால் இன்று 17.4.12 வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா நாளை புதூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday 4 April 2012

பெண்களின் மானம் காத்த இளையான்குடி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!

பெண்களின் மானம் காத்த இளையான்குடி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!








பெண்களின் மானம் காத்த இளையான்குடி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!


 இளையான்குடி சாலையூர் ஹனபி ஜமாஅத்திற்கு சொந்தமான புறவழிச்சாலையில் உள்ள சமுத்திர ஊரணியில் (எழுமிச்சை ஊரணி) மற்ற இடங்களில் தண்ணீர்; பற்றாக்குறையால் இங்கு பெண்கள் அதிக அளவில் குளிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள்.  அவ்வழியே சென்ற இளையான்குடி சமூகநலக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாபு ஹவுத், செல்லக்கண்ணு செய்யது, ஓசியன் முஸ்தபா ஆகியோர் திறந்த வெளியில் நமது பெண்கள் உடைமாற்ற மறைவிடம் இல்லாமல் சிரமப்படுவதை கண்டு கவலையோடு, இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் மாவட்ட செயலாளர் துருக்கி ரபீக் அவர்களை தொடர்புகொண்டு பாதுகாப்பிற்காக தட்டியை கட்ட வேண்டும் என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் உதவியால் நண்பர்கள் செரிப், தோணிபாவா ஆகியோர் இம்முயற்சியில் பெரும்பங்கு வகித்து மேற்படி வேலையை முடித்தனர். அல்ஹம்து லில்லாஹ்.